வகுப்புக்கு வராத மாணவர்கள் : மனசாட்சி உறுத்தியதால் தனது 23 லட்சம் ரூபாய் சம்பளத்தை திரும்ப கொடுத்த கல்லூரி பேராசிரியர்

0 2560

பீகாரில், மாணவர்கள் வகுப்பில் பங்கேற்காத நிலையில், தனது 3 ஆண்டு ஊதியத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் திரும்ப அளித்துள்ளார்.

முஷ்ரபூரில் உள்ள நித்தீஸ்வரர் கல்லூரியில் லாலன் குமார் என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

தனது இந்தி வகுப்பில் மாணவர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் மனசாட்சிக்கு பயந்து, 23 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயை பல்கலைக்கழகத்துக்கு திரும்ப அளித்துள்ளதாக, உதவி பேராசிரியர் கூறியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments