எங்களுக்கு தெரியாமல் தந்தை சிவாஜியின் சொத்துக்களை பிரபுவும் ராம்குமாரும் விற்றுள்ளனர்: சிவாஜி மகள்கள்

0 2641

தந்தை சொத்தில் பங்கு தராமல் பிரபுவும் ராம்குமாரும் ஏமாற்றிவிட்டதாக சிவாஜி கணசேனின் மகள்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களுக்கு தெரியாமல் தந்தையின் சொத்துகளை விற்றுள்ளதாக கூறியுள்ளனர். ஆயிரம் சவரன் தங்க நகைகள் மற்றும் 500 கிலோ வெள்ளி பொருட்களை அபகரித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது என கூறியுள்ள அவரது மகள்கள், சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments