நாகூர் துறைமுகத்தில் இரு கிராம மீனவர்கள் இடையே மோதல்.. ரூ.7 லட்சம் மதிப்பிலான பைபர் படகு, வலைகளுக்கு மர்மநபர்கள் தீவைப்பு..!

0 1607
நாகூர் துறைமுகத்தில் இரு கிராம மீனவர்கள் இடையே மோதல்.. ரூ.7 லட்சம் மதிப்பிலான பைபர் படகு, வலைகளுக்கு மர்மநபர்கள் தீவைப்பு..!

நாகை மாவட்டத்தின் நாகூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைபர் படகு, வலைகள் உள்ளிட்டவைக்கு தீ வைக்கபட்டுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் மேல பட்டினச்சேரி- கீழப்பட்டினச்சேரி கிராம மீனவர்கள் இடையே கருத்து வேறுபாடு மற்றும் மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் கீழ் பட்டினசேரியை சேர்ந்த விஜி என்பவரின் பைபர் படகு, வலைகளில் மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதனையறிந்து துறைமுகத்தில் திரண்ட மீனவ பெண்கள், தீ வைத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக வலியுறுத்தினர்.

இதுகுறித்து 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments