ரோஸ் வாட்டர் ரெஸ்டாரன்டில் ரெய்டு.. 10 கிலோ இறால் உட்பட 45 கிலோ சிக்கன் பறிமுதல்..!

0 2755

சென்னை அண்ணா நகரில் உள்ள ரோஸ் வாட்டர் என்ற உணவகத்தில் இறால் வகை உணவுகள் கெட்டுப்போனதாக வந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த உணவகத்தில், உணவு தயாரிப்புக் கூடம், இறைச்சி பதப்படுத்தும் இயந்திரங்கள் உள்ளிட்டவை போதிய பராமரிப்பின்றி இருந்ததை கண்டறிந்த அதிகாரிகள், அதனை புதுப்பிக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், புதுப்பித்தப்பிறகு மீண்டும் ஆய்வு நடந்த பின்னரே அந்த உணவகம் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். உணவகத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள், 10 கிலோ இறால், 45 கிலோ சிக்கன், மட்டன் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments