தனியார் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி காட்டி மிரட்டல்.. ரூ.76 லட்சம் ரொக்கம், ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை..!
ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் தனியார் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி காட்டி மிரட்டி ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில நிமிடங்களிலேயே நடந்த இந்த துணிகர கொள்ளையில் 76 லட்சம் ரூபாய் ரொக்க பணமும், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையும் பறிபோனதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருசக்கர வாகனங்களில் தப்பியோடிய கொள்ளையர்களின் அடையாளங்கள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி வெளியாகியுள்ளன.
Comments