குடும்ப பிரச்னை காரணமாக மலையடிபள்ளத்தில் 2 மகள்களுடன் இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தாய் தற்கொலை..!

0 2030

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் மலையடிபள்ளத்தில் விழுந்து தாய் மற்றும் 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

10 அடி ஆழம் கொண்ட நீர் நிரம்பியிருந்த மலையடி பள்ளத்தில் நேற்று காலை 10 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் தனது 2 மகள்களுடன் இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு குதித்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3பேர் உடலையும் மீட்டனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மாஞ்சான் விடுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு மற்றும் மகள்கள் கோபிகா, தர்ணிகா என்பது தெரியவந்தது.

கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசாரின்  முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments