காலரா நோய் பாதிப்பு : காரைக்காலில் 144 தடை உத்தரவு அமல்..!

0 1823
காலரா நோய் பாதிப்பு : காரைக்காலில் 144 தடை உத்தரவு அமல்..!

புதுச்சேரியின் காரைக்காலில் காலரா நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும், 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அங்கு கழிவு நீர் கலந்த குடிநீர், சுகாதாரமற்ற உணவுகளால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 1,500 பேர் சிகிச்சை பெற்றதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரி வளாகங்களில் தூய்மைப்பணி மேற்கொள்ளும் வகையில் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைய வேண்டாம் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments