பைக்கில் சென்றவரை துரத்திச் சென்று கடித்து குதறிய வெறிநாய்.. வாகன ஓட்டி மருத்துவமனையில் அனுமதி..!

0 1391
பைக்கில் சென்றவரை துரத்திச் சென்று கடித்து குதறிய வெறிநாய்.. வாகன ஓட்டி மருத்துவமனையில் அனுமதி..!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே, பைக்கில் சென்ற நபரை வெறிநாய் ஒன்று துரத்திச் சென்று கடித்துக் குதறிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

நட்டியங்கல் பகுதியைச் சேர்ந்த மனாப், மண்ணார்காடு சாலையில் பைக்கில் சென்ற கொண்டிருந்த போது, முன்னே சென்ற ஒரு பைக்கை வெறிநாய் துரத்தியுள்ளது.

அச்சமடைந்த மனாப் பைக்கை நிறுத்திவிட்டு நின்ற நிலையில், அவரை நோக்கி ஓடிவந்த வெறிநாய் எகிறி பைக்கில் அமர்ந்திருந்த மனாப்பின் கையை கடித்துள்ளது.

உடனே மனாப் தப்பிச் செல்ல முயன்ற போது, அந்த நாய் அவரது கையை கவ்விய படியே விடாமல் துரத்தியதால் அவர் நிலைதடுமாறி பைக்குடன் கீழே விழுந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments