ஊராட்சிமன்ற தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட 6 பேர் கொண்ட கும்பல் கைது.!

0 1738

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், ஊராட்சிமன்ற தலைவரை கொலை செய்ய வெடி குண்டு வீசி பயிற்சி எடுத்த கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த கும்பலிடம் விசாரணை நடத்த முயன்றபோது தப்பியோடிய நிலையில், விஜய் என்ற நபரை கைது செய்தனர்.

விசாரணையில், வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவரான சங்கரை, மர்ம கும்பல் கொலை செய்ய திட்டமிட்டு, வெடிகுண்டு வீசி பயிற்சி எடுத்தது தெரிய வந்தது.

தீவிர தேடுதலுக்கு பின்னர் பெங்களூரில் இருந்த 2 பேர் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை அதிபர்களிடம் மிரட்டி பணம் பறிக்கவும், அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments