"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"-பழந்தமிழ் வரிகளை மேற்கோள் காட்டி வாக்கு கேட்ட திரௌபதி முர்மு

0 1849

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்மு, புதுச்சேரி மற்றும் சென்னையில் கூட்டணி கட்சித் தலைவர்களிடம் ஆதரவு திரட்டினார்.

இன்று காலை புதுச்சேரி சென்ற முர்மு, முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும், சுயேச்சைகள் 4 பேரும் ஆதரவு தெரிவித்தனர். இதனை அடுத்து, சென்னை வந்த முர்மு, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கோரினார்.

நிகழ்ச்சியில் பேசிய முர்மு, யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற வரிகளை மேற்கோள் காட்டி வாக்கு கேட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments