பக்கவாட்டில் உரசிய டிப்பர் லாரி.. கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதிய தனியார் பேருந்து.. 3 பேர் காயம்..!

0 3264

கேரள மாநிலம் கண்ணூர் அருகே, டிப்பர் லாரி பக்கவாட்டில் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தின் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கண்ணூர் நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மாம்புறம் பகுதியில் அதிவேகமாக வந்த போது, எதிரே வந்த டிப்பர் லாரி பேருந்தின் பக்கவாட்டில் உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியதில், மின்கம்பம் சரிந்து பேருந்தின் மீது விழுந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments