ஒடேஷா நகரில் ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதல்.. 21 பேர் கொல்லப்பட்டதாக மீட்பு படை தகவல்!

0 966

ஒடேஷா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பொழுதுபோக்கு மையத்தில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிறுவன் உள்பட 21 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஒடேஷா அருகே உள்ள Sergiyvka டவுனில் அடுக்குமாடி குடியிருப்பு உள்பட இரு கட்டடம் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். ஈடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments