உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலை முடக்கம்.. நச்சு நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் நடவடிக்கை..!

0 3308
உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலை முடக்கம்.. நச்சு நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் நடவடிக்கை..!

பெல்ஜியத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய சாக்லெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் உணவை நச்சுப்படுத்தும் நுண்ணுயிரிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலை மிகப்பெரிய அளவில் திரவ சாக்லேட்டுகளை தயாரித்து வந்தது. ஜூன்  25 ஆம் தேதிவரை சப்ளை செய்யப்பட்ட சாக்லெட்டுகளை கடைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று அத்தொழிற்சாலை தற்போது தனது டீலர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மூன்று மாத கால தீவிர ஆய்வுக்கு பின்னரே இந்த தொழிற்சாலையில் மீண்டும் சாக்லேட் தயாரிக்க அனுமதி அளிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments