2 நாட்கள் கடலில் தத்தளித்த ஐந்து மீனவர்களை மீட்ட கடலோர காவல் படை... வெளியான வீடியோ

0 1459

கொச்சி அருகே கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து 2 நாட்கள் நீரில் தத்தளித்த ஐந்து மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டனர்.

மீனவர்கள் சென்ற படகு கடல் சீற்றத்தில் சிக்கி நீரில் மூழ்கியது. அந்தவழியாக சென்ற வணிகக் கப்பல் இரு நாட்களாக கடலில் தத்தளித்த 5 மீனவர்களை மீட்டது. தகவல் அறிந்து கடலோர காவல்படை படகு வந்த நிலையில், கடல் சீற்றத்தால் மீனவர்களை பரிமாற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் வணிகக் கப்பலில் இருந்து மீனவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காணாமல் போன மற்றொரு மீனவரை தேடும் பணியில் கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments