40 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்... 7 மணி நேரமாக போராடி உயிருடன் மீட்பு

0 1015

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் 40 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

நாராயண்புரா பதர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 5 வயதான திபேந்திர யாதவ், நேற்று மதியம் 2 மணியளவில் விளையாடி கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments