மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்..

0 2606
சென்னையில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியரான ஸ்ரீதர், தன்னிடம் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட 2 மாணவிகள், ஆடியோ, வாட்ஸ் அப் சாட்டிங் உள்ளிட்ட ஆதாரங்களுடன் குழந்தை நல குழுவிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் குழந்தைகள் நலக்குழு சார்பில் ஆசிரியர் ஸ்ரீதர் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இதனிடையே, புகாருக்குள்ளான ஆசிரியர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments