நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதி கோரி நவாப் மாலிக், அனில் தேஷ்முக் மனு தாக்கல்

0 1205
நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதி கோரி நவாப் மாலிக், அனில் தேஷ்முக் மனு தாக்கல்

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதி கோரி தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 17ம் தேதி சட்டமேலவை தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரிய இருவரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் வாக்களிக்க அனுமதி கேட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments