காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரம்.. விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைப்பு!

0 1240

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்த தொலைதூர கல்வி மாணவர்களின் விடைத்தாள்கள் பழைய பேப்பர் குடோனில் இருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட பேராசிரியர்கள் குழுவை துணைவேந்தர் அமைத்துள்ளார்.

விடைத்தாள்கள் கடந்த வாரம் மாயமான நிலையில், ஆலம்பட்டி பகுதியில் உள்ள பழைய பேப்பர் கடையில் இருந்து சில விடைத்தாள்களும், விரகனூர் பகுதியில் உள்ள மொத்த பேப்பர் குடோனில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள்களும் மீட்கப்பட்டது.

ஆடு மேய்ப்பவர்கள் ஜன்னல் வழியே விடைத்தாள்களை திருடி எடைக்கு போட்டதாக கூறப்படும் நிலையில், விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments