பாம்புகளால் அவதிப்படும் பாலசோர் மக்களுக்கு உதவும் பாம்பு பிடிக்கும் நபர்..!

0 1462

ஒடிசா மாநிலம் பாலசோரில் விஷமுள்ள 47 பாம்புகளும் 28 பாம்பு முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. இதில் கொடிய விஷமுடைய ராஜநாகம், கட்டுவிரியன் போன்ற விஷப்பாம்புகள் உள்ளன.

கார்த்திக் சேத்தி என்பவர் பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். அவர் இந்தப் பாம்புகளை லாவகமாக உயிருடன் பிடித்து வருகிறார். நேற்று மிகப்பெரிய நாகப்பாம்பு ஒன்றை அவர் மீட்டு தனது பாம்புகளின் எண்ணிக்கையை 47 ஆக்கினார்.

சுமார் 6 அடி நீளம் 5 கிலோ எடை கொண்ட இந்த நாகம் 21 வயதுடையது. விரைவில் வனப்பகுதிக்கு இந்தப் பாம்புகளைக் கொண்டு போய் விடப்போவதாக கூறுகிறார் கார்த்திக்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments