ஜிஎஸ்டி கவுன்சிலின் 2வது நாள் கூட்டம் இன்று கூடுகிறது.. வரிவிலக்கு, வரி ஏய்ப்பைத் தடுக்க நடவடிக்கை குறித்து ஆலோசனை.!
ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண்டாவது நாள் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது.
ஜி.எஸ்.டி.யால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்காக மாநில அரசு செஸ் வரி விதித்து வருகிறது. இந்த வரிவிதிப்பு வருகிற 30-ந் தேதி முடிவடைகிறது. எனவே இதை இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மாநிலங்கள் முயற்சி செய்து வருகின்றன.
இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரி கட்டமைப்பை திருத்துவது, ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
Comments