தாழ்வாக பறந்துச் சென்ற விமானம் வெடித்ததாக பரவிய தகவல் வதந்தி - மாவட்ட ஆட்சியர் விளக்கம்.!

0 2805

அரியலூர் அருகே தாழ்வாக பறந்துச் சென்ற விமானம் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக பரவிய தகவல் வதந்தி என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

காலையில் பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட எல்லை வனப்பகுதியில் ஒரு விமானம் தாழ்வாக பறந்து சென்றதாகவும், அது சென்ற சில நிமிடங்களில் பயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த பயிற்சி விமானமோ அல்லது ஹெலிகாப்டரோ கீழே விழுந்து வெடித்து சிதறி இருக்கலாம் என தகவல் பரவியதை அடுத்து போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments