ஓலா நிறுவன கால் டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து கொலை செய்த 3 பேர் கைது.!

0 4359

செங்கல்பட்டில், ஓலா நிறுவன கால் டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு காருடன் தப்பி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கால் டாக்சி டிரைவரான அர்ஜூனை,  சோழிங்கநல்லூரில் இருந்து ஓலா நிறுவனம் மூலம் புக் செய்த கும்பல், நள்ளிரவில் செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் வைத்து, அர்ஜுனின் கழுத்தில் கத்தியால் அறுத்து, சாலையில் தள்ளி விட்டு காருடன் தப்பி சென்றது.

இவ்வழக்கு தொடர்பாக சிசிடிவி பதிவுகளையும், செல்போன் தரவுகளையும் சேகரித்து ஆய்வு செய்த போலீசார், பெரம்பலூர் மாவட்டம் கரியனூர் கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, பிரசாந்த், கட்டிமுத்து ஆகிய இளைஞர்களை கைது செய்தனர்.

விசாரணையில் காரை திருடிச் செல்வதற்காக கொலை செய்ததை மூவரும் ஒப்புக்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments