சோதனையின் போது மோதல்.. இளைஞரை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

0 2401

பஞ்சாப் மாநிலத்தின் தேரா பஸ்ஸியில் சோதனை மேற்கொள்ள முயன்ற போது ஏற்பட்ட மோதலில், இளைஞரை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஹெபத்பூர் சாலையில் நின்றிருந்த கணவன் மனைவியை போலீசார் சோதனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, மதுபோதையில் இருந்த போலீசார் தன் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட மோதலில் தனது சகோதரரை காவல் உதவி ஆய்வாளர் சுட்டதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கணவன் மனைவியை விசாரிக்கும் போது, தங்களை இளைஞர் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments