திருமணமான பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த விஏஓ.!

0 4949

கடலூரில் பட்டா மாறுதலுக்காக வந்த திருமணமான இளம் பெண்ணை விடுதிக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கிராம நிர்வாக அலுவலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேடபப்பாளையத்தில் இளையராஜா என்பவர் விஏஓ ஆக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய அலுவலகத்திற்கு பட்டா பெயர் மாறுதல் கேட்டு சென்ற இளம்பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பெண்ணை அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த படத்தை காட்டி பெண்ணை மிரட்டி மகாபலிபுரம் விடுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இளையராஜா பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments