இளம்பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது.!

0 4175

செங்கல்பட்டு அருகே இளம்பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த 25-ந்தேதி செங்கல்பட்டு-காஞ்சிபுரம் பைபாஸ் சாலை பேருந்து நிலையத்தில் வேலூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆத்தூரைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவனது நண்பர்கள் சேர்ந்து, அப்பெண்ணை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான சரவணனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments