கார் மோதியதில் பைக்கில் சென்ற காவலர் 4வயது மகனுடன் பரிதாபமாக பலி

0 5598

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கார் மோதியதில் பைக்கில்  சென்ற காவலர் மற்றும் அவரது 4வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். 

வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மார்சல் என்பவர் காடல்குடி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் ஜவுளி எடுத்துவிட்டு வீடு திரும்பும் போது எட்டயபுரம் சாலையில் அவரது பைக் மீது வேகமாக வந்த கார் பலமாக மோதியது.

இதில் தந்தை, மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மனைவி மற்றும் இன்னொரு மகன் ரஷ்வந்த் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுனர் சிவராமச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments