பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக பணம் ஈட்டலாம் எனக்கூறி 484 பேரிடம் ரூ.2 கோடி அளவில் மோசடி.!

0 1425

மதுரையில் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக பணம் ஈட்டலாம் எனக்கூறி 484 பேரிடம் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

அனுராதா என்பவரிடம் ஐஸ்வர்யா என்பவர் பிட் காயினில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக ஈட்டலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது.

அதனை நம்பிய அவர் முதலீடு செய்த நிலையில், துவக்கத்தில் அதற்குரிய பணத்தை இருதயராஜ் என்பவர் வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அனுராதா தனக்கு தெரிந்தவர்களிடம் கூறிய நிலையில், 2 ஆண்டுகளில் பலர் அதில் முதலீடு செய்தனர்.

இந்நிலையில், எப்ரல் முதல் இருதயராஜ் பணம் வழங்காததுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக ஆட்சியரிடம் பணம் கொடுத்தவர்கள் புகாரளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments