இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு பெரியாற்றை நீந்தி கடந்த 70 வயது பெண்மணி..!

0 974

கேரளாவில் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டிக்கொண்டு, பெரியாறு நதியை 70 வயது பெண்மணி ஒருவர் நீந்தி கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

ஆரிஃபா என்ற அந்த பெண்மணி, நீச்சல் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார். 780 மீட்டர் அகலமுள்ள பெரியாறு நதியை இரண்டு கைகளையும் கட்டிய நிலையில் அவர் 45 நிமிடத்தில் நீந்தி கடந்தார்.

நீச்சல் தெரியாமல் நதியில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், நீச்சல் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments