இருசக்கர வாகனத்திற்கு தவணை செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர் திட்டியதால் இளைஞர் தற்கொலை.!

0 1603

விழுப்புரத்தில் இருசக்கர வாகனத்திற்கு தவணை செலுத்தாததால், தனியார் நிதி நிறுவன ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டியதால், இளைஞர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வானகார குப்புசாமி வீதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற இளைஞர், தனியார் நிதி நிறுவனம் மூலம் மாதத் தவணையில் இருசக்கர வாகனம் வாங்கிய நிலையில், கடந்த 3 மாதங்களாக இ.எம்.ஐ கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ரவிக்குமாரின் வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன ஊழியர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த ரவிக்குமார், கடந்த 25ஆம் தேதி பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனியார் நிதி நிறுவன ஊழியர் மேகநாதன் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments