ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாஷ் உரம் தனியார் கிடங்கில் பதுக்கல் -பறிமுதல் செய்த காவல்துறை!

0 1091

தூத்துக்குடியில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 50 இலட்ச ரூபாய் மதிப்புள்ள பொட்டாஷ் உரத்தைத் தனியார் கிடங்கில் பதுக்கியதைக் கண்டறிந்த காவல்துறையினர் அதைப் பறிமுதல் செய்து, கடத்தல்காரர்களைத் தேடி வருகின்றனர். 

இந்தியன் பொட்டாஷ் நிறுவனத்திற்குக் கப்பலில் வந்த உரத்தை பிஎஸ்டிஎஸ் நிறுவனத்தின் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய அரசின் கிடங்குக்கு உரத்தைக் கொண்டு செல்லாமல் மறவன்மடம் அருகில் உள்ள தனியார் கிடங்கில் பதுக்கியுள்ளதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்துப் புதுக்கோட்டைக் காவல்துறையினர் தனியார் கிடங்கில் இருந்த 165 டன் பொட்டாஷ் உரத்தை மீட்டுக் கொண்டுவந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments