அதிமுகவை வழிநடத்த இபிஎஸ்சுக்கு வேண்டுகோள்.!

0 2200

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியை வழிநடத்தும்படி எடப்பாடி பழனிசாமியைப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் என்றும் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சென்னையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு முன் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனைக்ஹ்க்ஜ் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஒருமணி நேர ஆலோசனைக்குப் பின் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்துக்கு எடப்படி பழனிசாமி புறப்பட்டார். 

அதிமுக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்குக் கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓ.பன்னீர்செல்வம் படத்தைத் அதிமுக நிர்வாகி ஒருவர் வட்டமாகக் கிழித்தார்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 65 தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றதாகவும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி முடிந்துவிட்ட நிலையில், கட்சியை வழிநடத்தும்படி எடப்பாடி பழனிசாமியைப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் எனக் குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments