ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் இருபிரிவினர் இடையே மோதல்..!

0 1694

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் கட்டை மற்றும் கற்களால் இருபிரிவினர் பரஸ்பரம் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

மலையடா என்ற கிராமத்தில், இரு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வரும் நிலையில், ஒரு பிரிவினர் வாழும் பகுதியில் உள்ள கிணற்றில் மற்றொரு பிரிவைச் சேர்ந்த சிறுவன் தண்ணீர் அருந்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த சிறுவன் தாக்கப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் மற்றொரு பிரிவினரின் பகுதிக்குச் சென்று தாக்கினர்.

கற்கள், கட்டைகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதில் 8 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments