தண்ணீர் வாளியில் தலைக்குப்புற விழுந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு.!

0 1690

திருப்பூரில், வடமாநிலத் தம்பதியரின் 11 மாத குழந்தை தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்தது.

பீகாரைச் சேர்ந்த சன்விகா தேவி என்ற பெண்மணி தனது பெண் குழந்தையை தூங்க வைத்து விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். தூங்கி எழுந்த அந்த குழந்தை, தவழ்ந்து சென்று தண்ணீர் வாளியை பிடித்து எழ முயற்சித்த போது தலைக்குப்புற கவிழ்ந்து வாளிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

குழந்தை வாளிக்குள் இருப்பதை கவனித்த அக்கம்பக்கத்தினர், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments