மழை வெள்ளம் : மேகாலயாவில் லட்சக் கணக்கான மக்கள் பாதிப்பு.. விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்..!

0 1348
மழை வெள்ளம் : மேகாலயாவில் லட்சக் கணக்கான மக்கள் பாதிப்பு.. விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு ஒரே நாளில் சுமார் 96 டன் அளவிலான நிவாரண பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலம் வழங்கப்பட்டன.

அசாமில் பெய்த தொடர் கனமழையால் சுமார் 33 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக் கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக விமானப்படை மூலம் குடிநீர், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரையில் சுமார் 203 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. C-130, An-32 ரக விமானங்கள்ளும் Mi 17V5, Mi 171V ரக ஹெலிகாப்டர்களும் வெள்ள நிவாரண மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments