உணவு பற்றாக்குறையால் பட்டினி கிடக்கும் ஆப்கானுக்கு 3ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை அனுப்பியது இந்தியா..!

0 2354
உணவு பற்றாக்குறையால் பட்டினி கிடக்கும் ஆப்கானுக்கு 3ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை அனுப்பியது இந்தியா..!

உணவு பற்றாக்குறையால் பட்டினி கிடக்கும் ஆப்கான் மக்களுக்கு மனிதநேய உதவியாக மூன்றாயிரம் மெட்ரிக் டன் கோதுமையை பாகிஸ்தான் வழியாக இந்தியா அனுப்பியது.

ஆப்கானுக்கு இதுவரை 33ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா வழங்கி உள்ளது. உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து ஆப்கானுக்கான கோதுமை ஏற்றுமதியை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானுக்கு வழங்கப்படும் மனித நேய உதவிகள் முறையாக சென்றடைகிறதா என கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் இந்திய தொழிலநுட்ப குழு காபூல் சென்றுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments