பேனரில் இருந்த ஓபிஎஸ்,வைத்திலிங்கம் ஆகியோரது உருவப்படங்களை கிழித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

0 1732

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் நகர அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் பேனரில் இருந்த ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோரது உருவப்படங்களை கிழித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் கடைவீதியில் அமைந்துள்ள தண்ணீர் பந்தலுக்கு சென்ற அதிமுக நகர செயலாளர் சிங்.செல்வராஜ் தலைமையிலான நிர்வாகிகள் ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கத்தின் உருவப்படங்களை கிழித்தெறிந்ததுடன் ஓபிஎஸ் ஒழிக என்றும், மூன்றாம் புரட்சித்தலைவர் இபிஎஸ் வாழ்க என்றும் முழக்கமிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments