விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுமார் 10 டன் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

0 2421

கேரள மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதை பயன்படுத்தி தமிழகத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் 10 டன் கெட்டுப்போன மீன்கள் தமிழக - கேரள எல்லையான ஆரியங்காவில் பறிமுதல் செய்யப்பட்டன.

ரகசிய தகவலின் பேரில் ஆரியங்காவு பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்ட கேரள உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், 3 கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அதில் சுமார் 10 டன் கெட்டுப்போன, பதப்படுத்தப்பட்ட மீன்கள் இருப்பது தெரிய வந்தது. அவை கடலூர் பகுதிகளில் இருந்து கொல்லம் கருநாகப்பள்ளி பகுதிக்கு கொண்டு செல்லப்படவிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments