அருவியில் பெண்களிடம் தகாத முறையில் நடந்த கொண்ட முன்னாள் ராணுவ வீரர் உட்பட 5 பேர் கைது..!

0 2198
அருவியில் பெண்களிடம் தகாத முறையில் நடந்த கொண்ட முன்னாள் ராணுவ வீரர் உட்பட 5 பேர் கைது..!

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் பெண்களிடம் தகாத முறையில் நடந்ததுடன், வனக்காலவர்களை தாக்கிய புகாரில் மூன்று முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் உள்ளிட்ட 5 பேர் அருவியில் குளித்தபோது தவறாக நடந்து கொண்டதாக வனத்துறையினரிடம் பெண்கள் சிலர் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்தபோது அவர்கள் வனத்துறையினருடன் கைக்கலப்பில் ஈடுபட்டு தாக்கியதாகவும், கத்தியை பயன்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவர்களில் ஒருவர் மதுபோதையில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த 5 பேரையும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments