எனக்கு பதவி மீது ஆசையில்லை.. பதவியிலிருந்து விலகத் தயார்.. மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே!

0 1526

தனக்கு பதவி மீது ஆசையில்லை என்றும், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயார் எனவும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

அரசியல் நெருக்கடி முற்றியுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் உத்தவ் தாக்கரே, காணொலி மூலம் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

தனக்கு கழுத்து மற்றும் தலையில் மிகுந்த வலி இருப்பதாகவும், கண்ணையே திறக்க முடியாத நிலையில், அதை குறித்து கவலைக் கொள்ளவில்லை என்ற உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவுக்காக தான் வகித்த துறையையே விட்டுக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

கவுகாத்தியில் முகாமிட்டுள்ள அதிருப்தியாளர்கள் கட்சியையே உடைக்க முயற்சிப்பதாகவும் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments