பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம்.. 4 பேரை தேடி வரும் காவல்துறை!

0 1582

நெல்லை மாவட்டத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக புகாரில் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திசையன்விளை அருகே இட்டமொழியில் தன்னை ஐந்து பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், நாகலிங்கம் என்ற இளைஞரை கைது செய்து, வழக்கில் தொடர்புடைய 3 சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த பெண்ணும் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரில் ஒருவரும் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததாகவும், அந்த நபர் நண்பர்களுடன் இணைந்து வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments