சி.வி.சண்முகத்தின் கருத்துச் சட்டத்துக்கு உட்பட்டது இல்லை - வைத்தியலிங்கம்!

0 1017

அதிமுக கட்சிப் பிரச்சனையில் நீதிமன்றம் ஏற்கெனவே தலையிட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவைக் கூட்டும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.

அரியலூரில் பேசிய வைத்தியலிங்கம் சி.வி.சண்முகத்தின் கருத்து சட்டத்துக்கு உட்பட்டது இல்லை எனத் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் பேசிய வைத்தியலிங்கம், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவை முன்மொழிவதற்காகத் தான் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்றுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தில் புகாரளிப்பதற்காக இல்லை என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments