டெல்லிக்குள் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கனரக வாகனங்கள் நுழைய தடை..!

0 1285
டெல்லிக்குள் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கனரக வாகனங்கள் நுழைய தடை..!

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை டெல்லிக்குள் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வழக்கமாக டெல்லியில் சரக்கு வாகனங்கள் போன்றவை நவம்பர் அல்லது டிசம்பரில் 20 நாட்கள் வரை நுழைய தடை விதிக்கப்படும் நிலையில், இம்முறை அந்த தடைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்குள் தினசரி சுமார் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை சரக்கு வாகனங்கள் நுழைவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments