வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா நகல் பெற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது.!

0 1926

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா நகல் பெற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைதுசெய்தனர்.

ஆசூரை சேர்ந்த கலைமணி என்பவருக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டாவை கிராம கணக்கு மற்றும் வட்ட கணக்கில் திருத்தம் செய்ய அவரது மகன் யுவராஜ் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அங்கு எழுத்தராக உள்ள சிவஞான வேலு பதிவேடுகளை எடுத்து கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் யுவராஜ் புகார் அளித்தார்.

அவர்களது ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவஞான வேலுவிடம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments