அனைத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் விரும்பினால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகத் தயார் - சஞ்சய் ராவத்

0 2038

அனைத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் விரும்பினால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகத் தயார் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவேசனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவாத், கவுகாத்தியிலிருந்து பேசுவதை தவிர்த்து மும்பை வந்து முதலமைச்சருடன் எம்.எல்.ஏ.க்களுடன் விவாதிக்கலாம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments