மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநர் பயணியிடம் தகராறு..!

0 2820

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர், பயணியிடம் தகராறு செய்ததோடு அவரை தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

வேலந்தாவளம் நோக்கி பயணிகளுடன் தனியார் பேருந்து புறப்படவிருந்தது. அந்த பேருந்து ஓட்டுநர் அஜ்மல், மதுபோதையில் ஒரு பயணியிடம் தகராறு செய்திருக்கிறார்.

அந்த பயணியும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஓட்டுநர் அஜ்மல், பயணியை காலால் எட்டி உதைத்ததை பயணிகள் சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

இது குறித்து பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மதுபோதையில் தகராறு செய்யும் தனியார் பேருந்து ஓட்டுநர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments