கடலில் மூழ்கத் தொடங்கிய சிரியா நாட்டு கப்பலில் இருந்து 15 பேர் மீட்பு

0 2902
கடலில் மூழ்கத் தொடங்கிய சிரியா நாட்டு கப்பலில் இருந்து 15 பேர் மீட்பு

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கடலில் மூழ்கத் தொடங்கிய சிரியா நாட்டு கப்பலில் இருந்து 15பேரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக காப்பாற்றினர்.

எம் வி பிரின்ஸ் என்ற சரக்கு கப்பல் சரக்கு கண்டெய்னர்களுடன் மலேசியா நாட்டில் இருந்து எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென கடலில் ஏற்பட்ட ராட்சத சூறாவளி புயல் காரணமாக அந்த கப்பல் மங்களூர் துறைமுகம் நோக்கி வந்த போது சுமார் ஒரு கடல்மைல் தொலைவில் தரை தட்டி நின்றது.

தகவல் அறிந்தஇந்திய கடலோர காவல்படையினர் விரைந்து சென்று கப்பலில் சிக்கி தவித்த 15பேரை 6 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments