30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரயில்வே ஊழியர்கள் ஸ்டிரைக்

0 32817

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ரயில்வே வேலை நிறுத்தத்தை இங்கிலாந்து அரசு சந்தித்து வருகிறது.

லண்டன் போன்ற நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள்,சுரங்க ரயில் நிலையங்கள் வழக்கமாக மக்கள் கடல் போல் காட்சியளிக்கும். இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள், ரயில் பயணிகளிடையே கடும் குழப்பம் நீடிக்கிறது.

பேருந்து நிறுத்தங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வாடகைக் கார்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியது.
ரயில்வே யூனியன்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments