நிற்காமல் சென்ற சரக்கு வாகனத்தை மடக்கி பிடித்த அதிகாரிகள்.. பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

0 3225

மதுரையில் வாகன தணிக்கையின்போது நிற்காமல் சென்ற சரக்கு வாகனம், மடக்கிப் பிடிக்கப்பட்டு அதிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வண்டியூர் சோதனைச் சாவடி அருகே வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த டாடா ஏஸ் வாகனம் அவர்களை கண்டபின் நிற்காமல் சென்றது.

அதனை பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற அதிகாரிகள், மடக்கிப்பிடித்து சோதனையிட்டபோது அதில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பண்டல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, வாகன ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments