கும்பகோணம் அருகே ரயில் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை.!

0 4120

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ரயில் மோதியதில் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக வீடியோ காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராசுரம் ரயில்வே கேட் அருகே இன்று காலை கும்பகோணம் நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு முத்துக்குமார் என்பவர் உயிரிழந்தார். தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ரயில் தண்டவாளத்தில் அவர் நின்றிருந்த போது ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments