மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் பலி.. டிரான்ஸ்பார்மரை பழுது பார்க்கும் பணியின் போது நேர்ந்த சோகம்!

0 2791

சென்னை நம்மாழ்வார்பேட்டையில், மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற ராதாகிருஷ்ணன் என்பவரை அவர் வசிக்கும் பகுதியில் மின் பழுது ஏற்படும் போது அதனை சரி செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அவ்வாறு ஏ.கே.சாமி தெருவில் மின்மாற்றியில் அவர் பழுது நீக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது மற்றொரு பகுதியில் இருந்த மின்மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் இயக்கியதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஓய்வுபெற்ற 65 வயது நபரை மின் பராமரிப்பு பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments